பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஜெர்தலாவ் ஊராட்சி இணைப்பை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஜெர்தலாவ் ஊராட்சி இணைப்பை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியுடன் ஜெர்தலாவ் ஊராட்சியை இணைக்க  தமிழக அரசு அரசானை பிறப்பித்துள்ளது. இதனை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கட்சி சார்பில், வட்ட தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெர்தலாவ், கோடியூர், திம்மம்பட்டி, சிக்கார்தனஅள்ளி, கணபதி கொட்டாய், செங்கோடபட்டி, மாதம்பட்டி,  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள்  பேரூராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை பாதிக்கப்படும், வீட்டு வரி, நில வரி அதிக அளவு உயரும் மேலும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் ஜெர்தலாவ் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என ஆர்பாட்டம் செய்தனர்.


அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகாவிடம் ஊராட்சி இணைப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட துனைத் தலைவர் ராஜா, வட்ட செயலாளர் ராஜா மற்றும் ஜெர்தலாவ் பஞ்சாயத்தை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad