கம்பைநல்லூரில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்த ஆய்வில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை மற்றும் 25000 அபராதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

கம்பைநல்லூரில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்த ஆய்வில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை மற்றும் 25000 அபராதம்.

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, மற்றும் கம்பைநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் காளியப்பன் உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மற்றும் கம்பைநல்லூர் காவல் நிலைய  முதல் நிலை காவலர்கள் மூக்கன், ரத்னவேல், தமிழ்செல்வி உள்ளிட்ட குழுவினர் இணைந்து கம்பைநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை, பேக்கரிகள், பெட்டி, பீடா கடைகளில் ஆய்வு செய்தனர். 


ஆய்வில்  செம்மணள்ளி சாலையில் தனியார்  பள்ளி அருகே ஒரு மளிகை கடையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கூல்லீப், ஹான்ஸ், விமல்-வி1 புகையிலை உள்ளிட்டவை சுமார் 2கிலோ அளவிலான 2000 மதிப்பு உடைய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கம்பைநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் யோகபிரகாஷ், மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கை பரிந்துரை பெயரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, அவர்கள் உத்தரவின் படி, மேற்படி  கடை இயங்க தடை விதித்து, உடனடி அபராதம் தலா ரூபாய்.25000 விதித்து கடை உரிமையாளரிடம் சலான் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 


மேலும் 15 தினங்கள் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரித்து உடன் கடையை மூடசெய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து 9444042322 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என விழிப்புணர்வு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad