தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஶ்ரீபுதூர்மாரியம்மன் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .
இத்திருவிழாவின் 4வது நாளான இன்று எருது விடும் நிகழ்ச்சியில் 12 கிராம பொதுமக்கள் ஒன்றினைந்து ஊருக்கு ஒரு காளைகள் விதம் 12 காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் காளை விடப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கோவிலை சுற்றி ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர் இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட பாலக்கோடு போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக