கடத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

கடத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் (MGNREGS Scheme) கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சியில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, விதிமுறைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளின்படி திட்டப்பணிகளின் செயலாக்கத்தை செம்மைபடுத்துதல் குறித்து கால்வாய் அமைத்தலில் உரிய அளவீடுகளை குறித்துகாட்டி, அதனடிப்படையில் துல்லியமாகவும், சீராகவும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சவுளுக்கொட்டாய் இரயில்வே பாலம் முதல் வேப்பிலைப்பட்டி இடுகாடு வரை ரூ.10.94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணி, இதே ஊராட்சியில் கடத்தூர் ஒன்றிய நாற்றாங்கால் ரூ.9.48 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளின்படி திட்டப்பணிகளின் செயலாக்கத்தை செம்மைபடுத்துதல் குறித்து கால்வாய் அமைத்தலில் உரிய அளவீடுகளை குறித்துகாட்டி, அதனடிப்படையில் கால்வாய் அமைத்தலில் உரிய அளவீடுகளை குறித்துகாட்டி, அதனடிப்படையில் துல்லியமாகவும், சீராகவும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


இதனைதொடர்ந்து, கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி, வேப்பிலைப்பட்டி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருதையும், ஊரக குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு புனரமைக்கும் பணி நடைபெற்று வருவைதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டுமெனவும், தெருவிளக்கு வசதி, கழிப்பிட வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் நிறைவேற்றித்தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அனைத்து குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்திடும் வகையில், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை அளவுகள் சரியாக உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஜெகதீசன், திருமதி.கலைச்செல்வி, உதவி பொறியாளர் திருமதி.சாந்தி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad