தொட்டில் குழந்தை திட்டத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 பிப்ரவரி, 2025

தொட்டில் குழந்தை திட்டத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள 5 காலி பணியிடங்களை தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தொட்டில் குழந்தை  திட்டத்தின் கீழ் பணிபுரியவுள்ள பணியாளர்களின் ஊதியம் மற்றும் தகுதிகள்  விவரம் கீழ்க்கண்டவாறு.

 

.எண்

பணியிடத்தின் பெயர்

தகுதிகள்

மாதாந்திர தொகுப்பூதியம் விவரம்

1.

காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்

12-ஆம் வகுப்பு

ரூ.7500/-

2.

செவிலியர்(பெண் மட்டும்)

Diploma Nursing

ரூ.7500/-

3.

உதவியாளர்(பெண் மட்டும்) (இருவருக்கு)

8-ஆம் வகுப்பு

ரூ.9000/-

(ஒருவருக்கும் ரூ.4500/-)

4.

காவலர்

8-ஆம் வகுப்பு

ரூ.4500/-

 

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 பணியிடங்களுக்கு நேர்காணல் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியரால் தொகுப்பூதியம் மற்றும்  தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 42 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மேலும் குழந்தைகளை கையாளுதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி-636 705 என்ற முகவரிக்கு வருகின்ற 27.02.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் (15 நாட்களுக்குள்) நேரில்  கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad