ஏரியூர் அருகே கூலி தொழிலாளி சாவு; சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

ஏரியூர் அருகே கூலி தொழிலாளி சாவு; சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்.


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நெருப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் கோவிந்தராஜ் வயது 35 கூலித்தொழிலாளி  இவருக்கு பெருமா என்ற மனைவியும் 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கோவிந்தராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமிக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில் இது தொடர்பாக பொன்னுசாமி ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விசாரணைக்காக கோவிந்தராஜ் மற்றும் அவரது தந்தை முத்துசாமி ஆகிய இருவரையும், ஏரியூர் காவல் நிலையத்தில் காவல் துறையினர் விசாரித்து ள்ளதாக கூறுகின்றனர். 


இந்த நிலையில் விசாரணைக்கு காவல்துறையினர் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக கூறி, கோவிந்தராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 


இது தொடர்பாக தகவல் அறிந்த ஏரியூர் காவல்துறையினர் கோவிந்தராஜனின் உடலை மீட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கோவிந்தராஜின் இறப்பில், மர்மம் இருப்பதாகவும் காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கூறி உறவினர்கள் பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 


இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறையினர், பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர் 


இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad