இந்நிலையில் சாலை பணிகள் நிறைவடையாத நிலையில் திடிரென எந்த அறிவிப்பும் இன்றி , கட்டண விபரங்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படாமல், நேற்று 20ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்க்கு வந்ததாக கூறி சுங்க சாவடி பயன்பாட்டிற்க்கு வந்ததாக ஊழியர்கள் சுங்க கட்டணம் வசூலிக்க தொடங்கினார்.
இதில் தேசிய நெடுஞ்சாலையை முழுவதும் பயன்படுத்தும் வாகனங்களுக்கும், பாலக்கோடு சுற்றி உள்ள பகுதியில் உள்ள வாகனங்களுக்கும் ஓரே விதமான கட்டணம் வசூலிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பாலக்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை வேண்டி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது: வாகனங்களை பழுது பார்க்கவும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை அருகில் உள்ள தர்மபுரிக்கு கொண்டு செல்கிறோம். மேலும் பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கு சுங்க சாவடி சுற்றியுள்ள பகுதியில் இருந்து கரும்பு பாரம் தினந்தோறும் ஏற்றி செல்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் எல்லோருக்கும் ஓரே சுங்க கட்டணம் என்பது விவசாயிகள், லாரி உரிமையாளர்கள் உள்ளூர் வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவே உள்ளுர் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் அல்லது கட்டண சலுகையாவது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக