வரும் 07ம் தேதி தருமபுரி கோட்ட விவசாயிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 பிப்ரவரி, 2025

வரும் 07ம் தேதி தருமபுரி கோட்ட விவசாயிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும்.


தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தபட்டதற்கிணங்க, பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் வருகின்ற 07.02.2025-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என  வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. இரா.காயத்ரி அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad