தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்தூபி மைதானத்தில் VK மொபைல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் திறப்பு விழா இன்று காலை டி.எஸ்.பி மனோகரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். வினோத்குமார், நவாஷ்ஷெரீப் ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு டி.எஸ்.பி மனோகரன் ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தார். குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை கர கூட் வி.கே. மொபைல்ஸ் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் உரிமையாளர் கே.பி. பாக்கியம் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி, தொழிலதிபர்கள், மொபைல் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர், யூடியுபர்ஸ் மலை காட்டு ராஜா, தகடூர் அபிசியல் , எம்.ஆர்.குணா, ஆர்.ஆர்.கதிராட்ஸ், டைம்பாஸ் தர்மபுரி, மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக