தருமபுரியில் ஜே.சி.ஐ அமைப்பின் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

தருமபுரியில் ஜே.சி.ஐ அமைப்பின் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


JCI தருமபுரி (Junior Chamber International) அமைப்பு, ஸ்ரீ மகாலக்ஷ்மி சில்க்ஸ், நியூபெர்க் பரிசோதனை நிலையம், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஆகிவை இணைந்து ஸ்ரீ மகாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவன வளாகத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வை ஸ்ரீ மகாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ் பாபு தொடங்கிவைத்தார், இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு கண் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றனர், இதில்  JCI தருமபுரி (Junior Chamber International) அமைப்பு, ஸ்ரீ மகாலக்ஷ்மி சில்க்ஸ், நியூபெர்க் பரிசோதனை நிலையம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.


இந்த நிகழ்வில் தருமபுரி JCI அமைப்பின் சார்பில் அந்த அமைப்பின் தருமபுரி பிரிவு தலைவர் Jc.பாபு, முன்னாள் தலைவர்கள் Jc.ரவிக்குமார், Jc.விஜயகுமார், Jc. கணேஷ், Jc. பிரசாந்த், Jc. சிவகுமார், Jc சிவகாமராஜ், Jc. யுவராணி, Jc. நிரோஷா, Jc. சுரேஷ், Jc. பிரசன்னா, Jc. ஸ்ரீனிவாசன், Jc சென்னையன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி சில்க்ஸ் சார்பில் தீபா, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவனையில் மேலாளர் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad