2024 25 ஆம் கல்வி ஆண்டிற்கான துறைகளுக்கிடையிலான மதிலகப் போட்டிகள் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக 24-02-2025 இன்று மாணவிகளுக்கான எரிபந்து போட்டிகள் நடைபெற்றது. 22 துறைகளைச் சார்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இருபால் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினை கல்லூரியில் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக