கடமடை காந்தி சேவாலயம் ஆதரவற்றோர் மாணவர்கள் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 மார்ச், 2025

கடமடை காந்தி சேவாலயம் ஆதரவற்றோர் மாணவர்கள் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த  கடமடை காந்தி சேவாலயம் ஆதரவற்றோர் மாணவர்கள் இல்லத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், மருத்துவர் சந்திரமோகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், மருத்துவர் அசோகன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், நகர செயலாளர் ராஜா, தொழிலதிபர் தீபொறிபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தக தொகுப்பு, படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து தூய்மை காவலர்களுக்கு புடவைகளை வழங்கி கேக் வெட்டி கொண்டாடனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், தூய்மை காவலர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் அசைவ உணவு வழங்கப்பட்டது‌.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மாணவர் சங்க அமைப்பாளர் முருகேசன், முன்னாள் கூட்றவு சங்க தலைவர்கள் வீரமணி, புதூர் சுப்ரமணி, பாலகிருஷ்ணன், சாம்ராஜ், கவுன்சிலர்கள் குருமணிநாதன், நகர துணை செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள்,  தகவல் தொழில் சங்கம்  தொழில்நுட்ப அணி உள்ளிட்ட  நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad