தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.03.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நுகர்வேர் தின உறுதிமொழியான நுகர்வோராகிய நாம் நுகர்வியல் கல்வியை அறிவதோடு நுகர்வோருக்குரிய உரிமைகளை நிலை நிறுத்தப் பாடுபடுவோம், நாம் தரமான பாதுகாப்பான பொருட்களையே வாங்குவோம், நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பட்டி (Bill) பெறுவோம், தேவைக்கேற்ற நுகர்வினை மேற்கொள்வோம், நாம் அனைவரும் பொறுப்புள்ள மற்றும் கடமையுள்ள நுகர்வோராக இருக்க ஒன்றுபடுவோம், நுகர்வோர் பாதுகாப்புடன் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-னை பின்பற்றி நுகர்வோராகிய நாம் நமக்கான பாதுகாப்பினை உறுதி செய்வோம், அடிப்படை உரிமைகளைப் பற்றி அறிவோம், நுகர்வோர் கல்வியை பரப்புவோம், எல்லா நிலையிலும் விழிப்புடன் செயல்படுவோம்.
விழிப்புணர்வு மிக்க நுகர்வோரே அதிகாரம் மிக்க நுகர்வோர் என்பதை அறிவோம், என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) திருமதி.நர்மதா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக