தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையேற்றார். நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், அரசு வழக்கறிஞர் முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, ஒன்றிய துணை செயலாளர் பி.எல்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதிகளை முறையாக வழங்காததையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் ஏரி வேலை திட்டத்தில் பணியாற்றிய கூலி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாயை வழங்காமல் விட்டதையும் கண்டித்தனர். ஏழைகளின் வாழ்க்கையை பாதிக்கின்ற மத்திய மோடி அரசை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர். இந்நிகழ்வில் சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் செழியன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் முருகன், குமாரன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அழகுசிங்கம், முன்னாள் கவுன்சிலர் முத்துசாமி முனியப்பன் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக