பாலக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 மார்ச், 2025

பாலக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் ரமலான் நோன்பை  முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி பாலக்கோடு தொகுதி தலைவர் ஹைதர்அலி தலைமையில்  நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு தொகுதி துணைத் தலைவர் அப்ரார் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியினை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாவித் தொகுத்து வழங்கினார்.தருமபுரி மொரப்பூர்  பாலக்கோடு தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

எஸ்.டி.பி.ஐ கட்சி தர்மபுரி மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அம்ஜ்த் பாஷா  துவக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர்  அபூபக்கர்சித்திக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர்  விஜயசங்கர், A.G சர்ச்சினுடைய பாதிரியார் ஜான்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு இப்தார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில்  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, மேற்கு மாவட்ட தலைவர் ஷபியுல்லா, அனைத்து ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள்  மற்றும் மத சகோதரர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர், தொகுதி செயலாளர் ஜீலான் நன்றி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad