தர்மபுரி பாரதி ஜனதா கட்சியின் சார்பில் தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சமக்கல்வி எங்களது உரிமை கையெழுத்து இயக்கம் மாவட்டத் தலைவர் சரவணன் நகரத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர் திட்ட மேலாண்மை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் மகேஷ் குமார். ஊடகப்பிரிவு மதியழகன். முன்னாள் மாவட்ட பொருளாளர் கணேஷ். முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜ் .மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா. மாநில பொதுக்குழு சரவணன். முன்னாள் நகர தலைவர் சக்திவேல். கட்சி நிர்வாகிகள் சித்தன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் புதிய கல்விக் கொள்கையினால் விளையும் நன்மைகள் தமிழ் ஆங்கிலத்தோடு கூடுதலாக ஒரு மொழி மாணவர்களுக்கு கற்கும் வாய்ப்பு. உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி தமிழில் பயில்வது கட்டாயம் ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு என்று திட்ட மேலாண்மை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் மகேஷ் குமார் பேசினார் இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக