தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து 82 விவசாயிகள், 160 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.
இதில், ஆர்.சி.எச். ரகம் பருத்தி குவிண்டாளுக்கு ₹6,909 முதல் ₹7,689 வரை விற்பனையானது. மொத்தமாக, 160 குவிண்டால் பருத்தி ₹11 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று இ-நாம் (e-NAM) மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் 24 விவசாயிகள், 32 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.
இதில், ஆர்.சி.எச். ரகம் பருத்தி குவிண்டாளுக்கு ₹7,099 முதல் ₹7,299 வரை விற்பனையானது. மொத்தமாக, 32 குவிண்டால் பருத்தி ₹2.20 லட்சம் மதிப்பில் விற்பனையானது. இதன்மூலம், மொத்த பருத்தி விற்பனை ₹13.20 லட்சத்தை கடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக