தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மகளிர் தின விழாவையொட்டி கண்டதை சனிக்கிழமை பொம்மிடியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு அக்கட்சியின் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார், பொம்மிடி நகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார், மாவட்ட மகளிரணி செயலாளர்கள் திலகவதி, கீர்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் பொம்மிடி ரெயில் நிலையத்திலிருந்து தொடங்கியது, இதனிடையே அமைதி ஊர்வலத்திற்கான முறையான அனுமதி பெறப்படவில்லை என பொம்மிடி உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவலர்கள் தெரிவித்தனர், மேலும் ஊர்வலத்தை தொடரக்கூடாது என எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சி நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அக்கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவத்தையடுத்து, த.வெ.க கட்சியினர் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக பொ.மல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அக்கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயகாந்த், நிர்வாகிகள் கார்த்திக், செல்வம் உள்ளிட்ட 17 பேர் மீது பொம்மிடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக