கம்பைநல்லூர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 மார்ச், 2025

கம்பைநல்லூர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்த 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட குடிநீர் திட்டப்பணிகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தினார்.


தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்த 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட குடிநீர் திட்டப்பணிகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


முன்னதாக, தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, பொதுமக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது, காலதாமதத்தை தவிர்த்து, உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


கம்பைநல்லூர் பேரூராட்சியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், கம்பைநல்லூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வெளிப்புற நோயாளிகள் பதிவேடு ஆய்வு செய்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக போடப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் விவரங்கள் குறித்தும், மருந்துகள் மற்றும் மாத்திரைகளின் தேவையான அளவு இருப்பு உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.


இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சியில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்ட்டத்தினையும், கடத்தூர் ஊராட்சி, மணியம்பாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள், விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தருமபுரி மாவட்டம், வடகரை பாப்பாரப்பட்டியில் ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.


இந்த ஆய்வுகளின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஜெகதீசன், திருமதி.கலைவாணி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad