பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 மார்ச், 2025

பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


 தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பவுனேசன் இவரது மகள் அஞ்சலி (வயது.23) பட்டதாரியான இவர் ஓசூரில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் சந்தோஷ் (வயது. 23 இவர் நல்லம்பள்ளியை அடுத்த ஊத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன் மகன் ஆவார்.

அஞ்சலி, சந்தோஷ் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்  இவர்களது பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓசூரில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு நண்பரின் வீட்டில் தங்கி இருந்தனர்.


இவர்களை பெற்றோர்கள் தேடுவதை அறிந்து இன்று பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதையடுத்து இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். பெண்ணின் பெற்றோர் மட்டுமே காவல் நிலையத்திற்க்கு வந்தனர். சந்தோசின் பெற்றோர் காவல் நிலையத்திற்க்கு வராத நிலையில் மணமக்கள் இருவரின் விருப்படி காதலியுடன் காதலனை காதலியின் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர். காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad