அஞ்சலி, சந்தோஷ் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓசூரில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு நண்பரின் வீட்டில் தங்கி இருந்தனர்.
இவர்களை பெற்றோர்கள் தேடுவதை அறிந்து இன்று பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதையடுத்து இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். பெண்ணின் பெற்றோர் மட்டுமே காவல் நிலையத்திற்க்கு வந்தனர். சந்தோசின் பெற்றோர் காவல் நிலையத்திற்க்கு வராத நிலையில் மணமக்கள் இருவரின் விருப்படி காதலியுடன் காதலனை காதலியின் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர். காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக