மேலும், புத்தக வாசிப்பின் பயன்கள் குறித்து அவர் உரையாற்றியபோது, “புதிய சொற்களை கற்றறிந்து, சொற்களஞ்சியத்தை விரிவாக்குவதோடு, மனஅமைதி, சிந்தனை திறன், நினைவாற்றல் ஆகியவை மேம்படும்” எனவும் விளக்கினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பள்ளி மாணவர்கள் புத்தகம் வடிவில் அமர்ந்து வாசிக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்வை தகடூர் புத்தகப் பேரவை, மாவட்ட நூலகத்துறை, மாவட்ட கல்வித்துறை இணைந்து ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி தே. சாந்தி, மாவட்ட நூலக அலுவலர் திருமதி அர. கோகிலவாணி, தகடூர் புத்தகப்பேரவை செயலாளர் மரு. இரா. செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன் ஆகியோர் தருமபுரி நான்கு ரோட்டில் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர், மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கி சமூகப் பொறுப்பை உணர்த்தும் செயலுக்கு முன்னிலை வகித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக