தருமபுரி மாவட்டத்தில் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

தருமபுரி மாவட்டத்தில் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.


தருமபுரி, ஏப்ரல் 2025: சமூகத்திற்கான சேவையை மேற்கொண்டும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்படுகிறது. இந்த விருதினை 2025 ஆண்டிற்கான விருதாக சுதந்திர தினம் 15.08.2025 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்கு 15 முதல் 35 வயதிற்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். விருதுக்கான தகுதிகள்:


  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 15.04.2024 அன்று 15 வயதுக்கு பூரணமாக இருக்க வேண்டும் மற்றும் 31.03.2025 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • சேவை காலம்: 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொண்ட சமுதாய சேவை மட்டுமே பரிசீலிக்கப்படும்.

  • தமிழகத்தில் குடியிருந்த தன்மை: விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

  • சமுதாய சேவை: விண்ணப்பதாரர்கள் சமுதாய நலத்துக்காக தொண்டு செய்திருத்தல் வேண்டும். இது அளவிடக்கூடிய மற்றும் கண்டறியக்கூடிய சேவையாக இருக்க வேண்டும்.

  • அரசு பணியாளர்: மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும்வர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.

  • சமுதாய செல்வாக்கு: விண்ணப்பதாரரின் உள்ளூர் சமூகத்தில் செல்வாக்கு அவருடைய விண்ணப்பத்தை பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.


விண்ணப்பம் செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2025 மாலை 5.45 மணி. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்கள் விருதிற்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad