பாலக்கோடு ஸ்ரீ திரௌபதியம்மன் தர்மராஜா திருக்கல்யாணம் - பக்தர்கள் பரவச வழிபாடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஏப்ரல், 2025

பாலக்கோடு ஸ்ரீ திரௌபதியம்மன் தர்மராஜா திருக்கல்யாணம் - பக்தர்கள் பரவச வழிபாடு.


பாலக்கோடு, ஏப்.12-

தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோடு ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் திரௌபதியம்மன்  - தர்மராஜா க்கும்  திருக்கல்யாணம் விழா வெகு விமர்சையாக நடந்தது. இதனையடுத்து திரௌபதம்மன் - தர்மராஜா சுவாமிக்கு  பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.


இத்திருக்கல்யாணத்தை முன்னிட்டு சித்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் வீட்டாரும், மேல்தெரு சின்னப்ப கவுண்டர் குடும்பத்தை சேர்ந்த மாப்பிள்ளை  வீட்டாரும் ஏராளனமான  சீர்வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து திரௌபதி அம்மனுக்கும் தர்மராஜாவுக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து கோவில் தர்மகர்த்தா இளங்கோ தலைமையில் சித்திரப்பட்டி, மேல்தெரு ஊர் கவுண்டர்கள்,மந்திரி கவுண்டர் மற்றும் இருவிட்டார் முன்னிலையில்  மங்கள இசை முழங்க சுவமி திருக்கல்யாணம்  நடந்தேறியது.


சிறப்பு அலங்காரத்தில் திரௌபதியம்மன் தர்மராஜாவும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமணம் ஆகாத பெண்கள், இளைஞர்கள், சுவாமி திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம், இதனால்  விழாவையொட்டி  சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சுவாமிக்கு மொய் பணம் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad