தருமபுரி, ஏப்ரல் 18:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், சேசம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து மாபெரும் மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த விழாவில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி. சி.திருமகள் அவர்கள் தலைமை வகித்து விழா பேருரையாற்றினார். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., சிறப்புரையாற்றி, 43 பயனாளிகளுக்கு ரூ.34.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- வருவாய்துறை சார்பில்:ரூ.31.35 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லம் கட்ட ஆணைகள், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் – 28 பயனாளிகள்
-
வேளாண்மைத் துறை:ரூ.6,000 மதிப்பிலான உதவிகள் – 3 பயனாளிகள்
-
தோட்டக்கலைத் துறை:ரூ.2.58 லட்சம் மதிப்பில் – 3 பயனாளிகள்
-
சமூக நலத் துறை:ரூ.2.58 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் – 5 பயனாளிகள்
-
ஆதிதிராவிடர் நலத் துறை:ரூ.22,156 மதிப்பில் தையல் இயந்திரங்கள் – 4 பயனாளிகள்
"சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் நடக்கப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்கள், வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பராமரிக்க வேண்டும். நீதிமன்றங்களில் வழக்கு தீர்வில் நேரம் எடுப்பதை தவிர்க்க, பொதுமக்கள் இலவச சட்ட உதவி மையங்களை பயன்படுத்தி விரைவான தீர்வுகளைப் பெறலாம்" எனக் கூறினார்.
"மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்ல, அவற்றை வளர்த்து பாதுகாப்பதும் மிகவும் முக்கியம். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சாலையோரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மரம் நடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மரம் வளர்த்துப் பார்த்த மகிழ்ச்சி மற்றதொன்றும் தர முடியாதது. பள்ளிகளில் மரம் நடும் இயக்கமாக மேம்படுத்தப்படும்" என்றார்.
மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சித்தலைவர் மரக்கன்று நட்டு தொடக்கமாக்கினர்.
-
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
-
சட்ட விழிப்புணர்வு முகாமில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக