தருமபுரி, ஏப்ரல் 16 –
முகாமில் கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி அவர்கள் முன்னிலையில், வருவாய்த் துறை, சமூகநலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி, மகளிர் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
இவை மட்டுமின்றி,
-
100 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான வீட்டு மனை பட்டா
-
71 பேருக்கு ரூ.42.60 லட்சம் மதிப்பில் இணையவழி பட்டா
-
45 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்
-
7 விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகள் (ரூ.2.61 லட்சம்)
-
2 விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன உபகரணங்கள்
-
140 பேருக்கு குடியிருப்பு பழுது நீக்க பணிக்கான ஆணைகள் (ரூ.15 லட்சம்)
-
5 பெண்களுக்கு ரூ.6.60 லட்சம் கடனுதவிகள்
-
9 பேருக்கு பட்டு வளர்ச்சி சார்ந்த நடவு மற்றும் புழு வளர்ப்பு மானியங்கள் வழங்கப்பட்டன.
மக்கள் தொடர்பு முகாமில், ஒவ்வொரு துறையிலும் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் மனுக்களும் பெறப்பட்டு, அவற்றின் மீதான நடவடிக்கைகள் பற்றி மாவட்ட ஆட்சியர் துறையினர் முன்னிலையில் நேரடியாக அறிவுறுத்தினார்.
இத்திட்ட முகாம் மூலம் பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நேரடியாக அறிமுகப்படுத்தி, தேவையானவர்கள் பயனடைய வழி வகுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்த முகாமின் சிறப்பம்சமாக, பின்தங்கிய மற்றும் மேம்பாட்டிற்கேற்ற பகுதிகளில் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சென்று, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்யும் நோக்குடன் திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆட்சியர் வலியுறுத்தினார்.
முகாமின் ஒரு பகுதியாக, நிதி வசதியின்றி கல்வியில் பின்தங்கும் மாணவர்களுக்காக செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களின் வசதிகள் மற்றும் உணவு தரம் குறித்து ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, தேவையான மாற்றங்களை உடனே மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மக்கள் தொடர்பு முகாமின் வெற்றி என்பது மக்களின் வாழ்வில் நேரடி மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக திட்டங்களை கொண்டு சேர்த்தல் என்றும், அரசின் சேவைகள் அனைத்தும் கிராம மக்களுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக